பிரவீனா லலிதா
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை பிரவீனா. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் சன் டிவி தொடர் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
ப்ரியமானவளே தொடரை அடுத்து சன்டிவியில் ஒளிபரப்பான மகராசி என்ற தொடரில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்தார். பெரும்பாலும் சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தற்போது வெள்ளித்திரையிலும் தனது நடிப்புத் திறனை வெளிக்காட்ட முயற்சி செய்து கொண்டுவருகிறார்.
தற்போது வெளிவந்த ஜெயம் ரவி படமான கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு தாயாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் ரசிகர்களயே எளிதில் பிரபலமானார்.
ஆத்தாடி.. எத்த தண்டி.. பாத்தாலே பக்குன்னு ஆகுதே..
இந்நிலையில், தன்னுடைய இணைய பக்கத்தில் பிரம்மாண்டமான யானை ஒன்றின் யானை என்றால் பொம்மை யானை இல்லைங்க.. ஒரிஜினல் யானை.
அந்த யானை அருகில் நின்று கொண்டு அதனை அசால்டாக ஹேண்டில் செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.
அந்த யானையின் தந்தமே அவருடைய உயரத்திற்கு இருக்கிறது போல் தெரிகிறது. ஆனால் எந்த பயமும் இல்லாமல் அசால்டாக அந்த யானை பக்கத்தில் நின்று கொண்டு ஒரு யானைப்பாகன் போல போஸ் கொடுத்திருக்கிறார்.