நடிகை ஓவியா
களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகனவர் நடிகை ஓவியா. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் கூடியது.
முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றநிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் ஓவியா. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பிறகு அதிக வாய்ப்பு இல்லாமல் இருந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்ப முதல் இவரது பேச்சு, நடவடிக்கை , டான்ஸ் போன்றவற்றால் ரசிகர்கள் குவிந்தனர். ஒருகட்டத்தில் ஓவியா ஆர்மி அமைத்து ஓவியாவை கொண்டாடினார்கள் ரசிகர்கள்.
ஓவியா வெளிப்படையாக பேசக்கூடியவர், குழந்தைதனம் கொண்டவர் என்பதால் தான் பலர் அவருக்கு ரசிகர்களாக மாறி ஓவியா ஆர்மியெல்லாம் துவங்கினர். அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேறிய ஓவியாவிற்கு படவாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான 90 எம்எல் படம் இவரை சர்ச்சையில் சிக்க வைத்தது.
ஓப்பன் டாக்
சமீப காலமாக இணைய ஊடகங்களில் பேட்டி கொடுத்து வரும் நடிகை ஓவியா சமீபத்தில் மதுபான விடுதி ஒன்றில் மதுபானம் அருந்தியப்படியே பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் நீங்கள் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்ற பேச்சு இணைய பக்கங்களில் பேசப்படுகிறது. அது உண்மையா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை ஓவியா துரதிஷ்டவசமாக நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது. இதுவரை இயற்கைக்கு நேரான உடலுறவு தான் நான் வைத்திருக்கிறேன். ஓரினச்சேர்க்கை என்பது எனக்கு இதுவரை தோன்றியது கிடையாது. அதை பற்றி சிந்தித்து கூட நான் பார்த்தது கிடையாது எனக் கூறியிருக்கிறார் நடிகை ஓவியா.
இங்கே விஷயம் என்னவென்றால் நடிகை ஓவியாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆனாலும், நான் இயற்கைக்கு நேரான முறையில் உறவு கொண்டு வந்திருக்கிறேன் என கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.