நடிகை ஓவியா
களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகனவர் நடிகை ஓவியா. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் கூடியது.
முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றநிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் ஓவியா. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பிறகு அதிக வாய்ப்பு இல்லாமல் இருந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்ப முதல் இவரது பேச்சு, நடவடிக்கை , டான்ஸ் போன்றவற்றால் ரசிகர்கள் குவிந்தனர். ஒருகட்டத்தில் ஓவியா ஆர்மி அமைத்து ஓவியாவை கொண்டாடினார்கள் ரசிகர்கள்.
ஓவியா வெளிப்படையாக பேசக்கூடியவர், குழந்தைதனம் கொண்டவர் என்பதால் தான் பலர் அவருக்கு ரசிகர்களாக மாறி ஓவியா ஆர்மியெல்லாம் துவங்கினர். அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேறிய ஓவியாவிற்கு படவாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான 90 எம்எல் படம் இவரை சர்ச்சையில் சிக்க வைத்தது.
ஓப்பன் டாக்
இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் ஓவியாவின் இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் பொதுவெளியில் இப்படி எல்லாம் பேசுவதா..? என விளாசி வருகின்றனர்.
அவர் பேசியதாவது, நான் ஓரினச்சேர்க்கையாளர் என்று தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், அது உண்மை கிடையாது. இப்போது வரை நான் ஆண்களுடன் மட்டும் தான் உறவு வைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய உடலுறவு முறை இயற்கைக்கு நேராக தான் இருக்கிறது. தவிர எதிராக இல்லை. துரதிஷ்டவசமாக நான் ஓரினச்சேர்க்கையாளராக ஆகவில்லை என்று கூறியிருக்கிறார்.