நடிகை நீலு நஸ்ரின்
சிங்கம்புலி என்ற திரைப்படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்த பிறகு இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை நீலூ நஸ்ரின்.
ரசிகர்கள் பலரும் இவரை நீலு ஆன்ட்டி என்று நினைவில் கொள்கின்றனர். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் தான் இவர் இணைய பக்கங்களில் பிரபலமானார்.
சிங்கம்புலி படத்தில் நடித்திருந்த இவர் பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு நடிகர்களுடன் சேர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் வீடியோ காட்சிகளை இணையத்தில் வெளியிட்டு சிங்கம்புலி படத்தில் நடித்த நிலு ஆன்ட்டி தான் இது என்று இணையத்தில் வைரல் ஆக்கினார்கள் ரசிகர்கள்.
தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அந்த வகையில், பேட்டி ஒன்றில் பேசும் பொழுது பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என பல நடிகைகள் கூறுகிறார்களே.. உங்களுக்கு அப்படி ஏதேனும் நடந்திருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
ஒப்பன் டாக்
அதற்கு பதில் அளித்த நடிகை நீலு நஸ்ரின் கண்டிப்பாக பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் எல்லாம் சாதாரணமாக நடக்கக் கூடிய ஒரு விஷயம். ஆனால், எனக்கு இப்படியான விஷயங்கள் நடந்தது கிடையாது.
ஏனென்றால் என்னுடைய கணவர் எப்போதுமே என்னுடைய அருகில் தான் இருப்பார். அதனால், என்னிடம் அப்படி யாரும் கேட்டது கிடையாது. கிடைக்கும் பட வாய்ப்புகள் தான் நடிப்பேனே தவிர இந்த படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்ற எந்த ஒரு எண்ணமும் என்னிடம் கிடையாது.
சிங்கம்புலி படத்தில் நான் அப்படி நடித்ததற்கு காரணம் படத்தில் நடிக்கும் பொழுது ஒரு மாதிரி படத்தை படமாக்கினார்கள். ஆனால், அதனை திரைப்படத்தில் ஒரு கோர்வையாக பார்க்கும் பொழுது மிகவும் மோசமானதாக இருந்தது.
இப்படித்தான் இந்த காட்சி வரும் என எனக்கு தெரியாது. அதன் பிறகு, எனக்கு சினிமா மீது இருந்த ஆசையே போய்விட்டது என பதிவு செய்திருக்கிறார்.