தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் நஸ்ரியா. இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் ஒரு சில படங்களில் நடித்தாலும் இவரது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்திருக்கிறார்.
மேலும் நஸ்ரியா தமிழில் முதன் முதலில் ‘நேரம்’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார். இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை விருதையும் பெற்றிருக்கிறார்.
இப்படத்திற்கு பின்பு ராஜா ராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்கா, பெங்களூர் நாட்கள், வாயை மூடி பேசவும் போன்ற திரைப்படங்களில் இவரது க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
2014 ஆம் ஆண்டு மலையாள நடிகரான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு நடிப்பதில் இருந்து விலகிக் கொண்டார் நடிகை நஸ்ரியா. தற்போது இவரது கணவர் பகத் பாசிலை குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
முகம் சுழிக்க வைத்த நஸ்ரியா பேச்சு
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பை பெற்றது. அந்த சமயத்தில் படத்தின் பிரமோஷனுக்காக காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் நடிகை நஸ்ரியா மற்றும் இயக்குனர் அட்டில் இருவரும் கலந்து கொண்டார்கள்.
அதில் பல கேள்விகள் சுவாரசியமான கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு இருவரும் பதில் அளித்தனர். ஒரு கட்டத்தில் நடிகை நஸ்ரியாவிடம் நீங்கள் மறைத்து வைத்திருக்கக்கூடிய உங்களைப் பற்றிய கேவலமான ரகசியம் ஏதாவது இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நடிகை நஸ்ரியா என்னைப் பற்றிய கேவலமான ரகசியம் என்னவென்றால்.. எனக்கு கழிவறைக்கு செல்லவே பிடிக்காது என்று கூறினார். இதைக் கேட்ட இயக்குனர் அட்லி மற்றும் DD-யின் ரியாக்ஷன் என்ன என்பதை இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்க்கலாம்.