நயன்தாரா
மலையாள பேரழகியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து ஐயா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். ஆரம்ப திரைப்படத்திலேயே தனது அற்புதமான திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
முதன்முதலில் வல்லவன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்தப் படத்தில் நடித்த நடிகர் சிம்புவுடன் ஒரு தனி அறையில் லிப்லாக் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.
அதனை தொடர்ந்து நடிகர் சிம்புவுடன் காதல் முறிவு செய்து கொண்ட நடிகை நயன்தாரா அதன் பிறகு வில்லு படத்தில் நடிக்கும் பொழுது நடிகர் பிரபுதேவா உடன் காதல் வயப்பட்டு சினிமாவை விட்டு விலகவும் முடிவு செய்தார்.
பிறகு இயக்குனரான விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் என்ற படத்தில் காது கேட்காத பெண்ணாக நடித்திருந்தார். இந்த சமயத்தில் தான் இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டதாம்.
இதனை அடுத்து அண்மையில் திருமணம் செய்து கொண்டு மூன்றே மாதத்தில் வாடகை தாயாரின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்ட இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் வித்தியாசமான பெயரை வைத்து அனைவரையும் அசத்தி இருக்கிறார்கள்.
ரகசியம் உடைத்த நடிகை நயன்தாரா
நயன் ஆரம்பகாலத்தில் கவர்ச்சி நெருக்கமான காட்சியில் நடித்து வந்தார், அதுவும் பில்லா படத்துல் படுமோசமான டூ பீஸ் ஆடையணிந்து வாய்ப்பிளக்க வைத்தார்.
அப்பத்தில் வெறும் உள்ளாடையுடன் நடித்தது பற்றி பகிர்ந்துள்ளார் நயன் தாரா. என்னால் அப்படியான காட்சியிலும் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்க தான் அந்த காட்சியில் நடித்தேன்.
இப்படி ஒரு காட்சி இருப்பது எனக்கு தெரியும். ஆனால் இயக்குனர், கேமராமேன் போன்ற பலருக்கும் எனக்கு டூ பீஸ் நீச்சல் உடை செட்டாகுமா, கவர்ச்சிக்கு நான் ஒத்து வருவேனா என்ற சந்தேகம் இருந்தது.ஏனென்றால் அப்படியான ஆடையில் என்னை அவர்கள் பார்த்தது கிடையாது.
அவர்களின் சந்தேகத்தை புரிந்து கொண்டு என்னால் அதை செய்ய முடியும் என்று நிரூபித்து டூ பீஸ் ஆடையணிய இயக்குனர் முன் நின்றேன். அதன்பின் தான் இயக்குனர் ஓகே சொல்லி அந்த காட்சியை படமாக்கினார்கள் என்று நயன் தாரா பகிர்ந்திருக்கிறார்.