நயன்தாரா
மலையாள பேரழகியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து ஐயா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். ஆரம்ப திரைப்படத்திலேயே தனது அற்புதமான திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
முதன்முதலில் வல்லவன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்தப் படத்தில் நடித்த நடிகர் சிம்புவுடன் ஒரு தனி அறையில் லிப்லாக் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.
அதனை தொடர்ந்து நடிகர் சிம்புவுடன் காதல் முறிவு செய்து கொண்ட நடிகை நயன்தாரா அதன் பிறகு வில்லு படத்தில் நடிக்கும் பொழுது நடிகர் பிரபுதேவா உடன் காதல் வயப்பட்டு சினிமாவை விட்டு விலகவும் முடிவு செய்தார்.
பிறகு இயக்குனரான விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் என்ற படத்தில் காது கேட்காத பெண்ணாக நடித்திருந்தார். இந்த சமயத்தில் தான் இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டதாம்.
இதனை அடுத்து அண்மையில் திருமணம் செய்து கொண்டு மூன்றே மாதத்தில் வாடகை தாயாரின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்ட இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் வித்தியாசமான பெயரை வைத்து அனைவரையும் அசத்தி இருக்கிறார்கள்.
பிரியாணி போட்ட நயன்தாரா
இந்த நிலையில் அன்னபூரணி விளம்பர நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா தனது ரசிகர்களுக்கு பிரியாணி ஊட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு ஒரு கல்லூரி இடம் அளித்தது. எந்த திரைப்பட விளம்பர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத நயன்தாராவால் ரசிகர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
இணையத்தில் தற்போது, இது தொடர்பான வீடியோ மிகவும் பிரபலமாகி வருகிறது. வீடியோ இங்கே கிடைக்கிறது.ஆனால் இப்போது தன்னுடைய படம் முடிந்த பின் ப்ரமோஷன் செய்ய சாப்பாடி கொடுப்பதை வழக்கமாக்கி வைத்துள்ளார்கள்.