மகாலட்சுமி முதல் திருமணம்
சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி . இவர் நடிகை மட்டும் இல்லாமல் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். படிப்பு முடிஞ்சதும் இவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக மீடியாவிற்குள் நுழைந்தார்.
அதற்கு பிறகு தான் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் அரசி என்ற வாய்ப்பு மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதற்கு பின் மகாலட்சுமி 10 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்து வருகிறார். இதனிடையே இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ள நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக, மஹாலட்சுமி கணவரிடம் கோபித்து கொண்டு மகனை அழைத்து கொண்டு தன்னுடைய அப்பா – அம்மா வீட்டிக்கு சென்றுவிட்டார். இப்படி ஒரு சூழ்நிலையில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக அனில்- மகாலட்சுமி இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். பின் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த நாளில் இருந்து பல விமர்சனங்களை சமாளித்து அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
மகாலட்சுமி செய்த செயல்
சமீபத்தில் மகாலட்சுமி ஆதரவற்ற இல்லத்திற்கு சென்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், தனது பிறந்த நாளன்று விலைமதிப்பற்ர பரிசை வழங்க முடிவு செய்ய இருப்பதாக தெரிவித்தார்.
தான் இறந்த பின் எனது உடல் உறுப்புக்களை தானம் செய்கிறேன், இதன்மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். நான் இறந்த பின் என் உறுப்புக்கள் மற்றவர்கள் வடிவில் வாழும் என்று கூறி ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார் மகாலட்சுமி. இதனை பலர் மகாலட்சுமியை பாராட்டியும் பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள்.