நடிகை மதுமிதா
கர்நாடகாவில் பிறந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஷானி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து புட்டமல்லி, ஜெய் ஹனுமான் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த மதுமிதா, ஜீ தமிழின் பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இந்த சீரியலில் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். பிரியாத வரம் வேண்டும் சீரியல் 2020-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், நம்பர் ஒன் காடலு என்ற தெலுங்கு சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் 2022-ம் ஆண்டு நிறைவடைந்தது.
அதன்பிறகு சன்டிவியில் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான டிஆர்பி ரேட்டிங் பெற்று பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சீரியல் ஆணாதிக்கம் படைத்த ஒரு குடும்ப தலைவனை அந்த வீட்டுக்கு வரும் மருமகள்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்ற அடிப்படையில் வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
உச்சகட்ட கவர்ச்சி
சமீபத்தில் தாய்லாந்து சென்றிருந்த மதுமிதா அங்கு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் . இதைப் பார்த்த ரசிகர்கள் எதிர்நீச்சல் ஜனனியா இது என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க