நடிகை ஷீலா ராஜ்குமார்
சின்னத்திரை டூ வெள்ளித்திரை என்கிற பயணத்தில் தங்களை அழகாக இணைத்துக்கொண்டு வெற்றிபெறும் நடிகைகள் வெகு சிலரே. அந்தவகையில் அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார்
பக்கத்து வீட்டு பெண் போன்ற அழகும் நடிப்பு திறமையும் அவரது கதாபாத்திரங்களில் பிரதிபலிக்க, தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நாயகியாக மாறியுள்ளார் ஷீலா ராஜ்குமார். பல சர்வேதேச விருதுகளை பெற்ற டூ லெட், விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்ற மண்டேலா என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம்
என்றால் ஷீலா ராஜ்குமாரை கூப்பிடுங்கள் என சொல்லும் அளவுக்கு யதார்த்த நடிப்பால் ரசிகர்களை மட்டுமல்ல, இயல்பான படைப்புகளை தர விரும்பும் படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளார் ஷீலா ராஜ்குமார். அதற்கேற்ற மாதிரி திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் தனது முத்திரையை பதிக்க துவங்கியுள்ளார் தனது அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஷீலா ராஜ்குமார்.
நடுக்கடலில் திருமணம்
மேலும், பலர் இவருக்கும் திருமணம் நடக்கவில்லை என்று தான் நினைதது வந்தனர். ஆனால், இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணம் செய்துகொண்டுள்ளார். அதிலும் நடுவே மாலை மாற்றி படு வித்யாசமாக திருமணம் செய்துகொண்டுள்ளார் ஷீலா.
இவர் நாளைய இயக்குனரில் பங்கேற்ற தம்பி சோழர் என்பவரை தான் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவரது குறும்படத்தில் நடிக்கும் போது தான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. ஆனால், வீட்டில் சம்மதம் தெரிவிக்ககாததால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார் ஷீலா.