திவ்யபாரதி
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் திவ்யபாரதி. இவர் முதன் முதலில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த ‘பேச்சுலர்’ திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று கதாநாயகியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே வெற்றி பெற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இவர் இப்படத்தில் நடித்து ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். மேலும் பிக்பாஸில் பிரபலமான முகென் ராவ்க்கு ஜோடியாக “மதில் மேல் காதல்” என்ற படத்திலும் நடித்துள்ளார்.
‘பேச்சுலர்’ திரைப்படம் வெற்றி பெற்றாலும் இவரின் கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்படவில்லை என்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இருந்தபோதிலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
திட்டிதீற்கும் நெட்டிசன்கள்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட திவ்ய பாரதியிடம் முதல் முத்தம் அனுபவம் பற்றி கேள்வி கேட்டார்.
பதில் அளித்த அவர், என்னுடைய முதல் முத்தம் கல்லூரியில் படிக்கும் போது நடந்தது. தற்போது அந்த நபருடன் பேசவில்லை. அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று திவ்ய பாரதி கூறியுள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள், அந்தரங்கமான விஷயத்தை பொது மேடையில் பேசுவது தவறு.. இது போன்ற கேள்விகளை தவிர்க்க வேண்டும் என்று திட்டி பதிவிட்டு வருகின்றனர்.