நடிகை தாரணி
சினிமாவில் காலம் காலமாக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வாய்ப்பு இருப்பதாக புகார் இருக்கிறது. மீ டூ வில் திரைத்துறையில் உள்ள பல பெண்களும் இதை தெரிவித்துள்ளனர். சன்டிவியின் தாலாட்டு சீரியலில் சிவகாமி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தாரணி. சென்னையை சேர்ந்த இவர் 15வயதில் சினிமாவில் அறிமுகமானார். 1988ஆம் ஆண்டில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் உன்னால் முடியும் தம்பி. அதில் கமலின் தங்கையாக நடித்தார். தொடர்ந்து பாலைவன பறவைகள், சின்ன வாத்தியார், கிழக்கு வீதி, வைகறை பூக்கள், பெரிய மருது போன்ற ஏராளமான திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர். செந்தில், கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியவர்.
விஷ்ணு, பூவே உனக்காக, மிடில் கிளாஸ் மாதவன், சூர்ய வம்சம், அஜித் நடிப்பில் 1998ல் வெளிவந்த காதல் மன்னன், எதிரும் புதிரும், பிரியமான தோழி,துள்ளாத மனமும் துள்ளும், மாசிலாமணி போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமாக அறியப்பட்டார். கிட்டதட்ட 50 திரைப்படங்களுக்கு மேல் சிறப்பு தோற்றத்தில் நடித்தவர்.
அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட கேமரா மேன்
சினிமாவில் அறிமுகமாகிய ஆரம்பத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் நடந்துள்ளதை பற்றி கூறியிருக்கிறார். இரு படங்களில் எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்த போது இயக்குனர் மற்றும் கேமரா மேன் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டாங்க. ஆனால் கேமரா மேன் தான் அதிகமுறை வெளிப்படையாக கேட்டார். தங்கச்சி நடிகையா இருந்த உன்ன ஹீரோயின் ஆக்கி இருக்கோம்.
தயவு செய்து தப்பா எடுத்துக்காதிங்க, நான் அப்படி தான் சினிமால வந்தேனா என்று கேட்டுக்கிட்டு வாங்க. தப்பா இருந்தா என்ன சொல்றீங்களோ அதை செய்றேன்னு சொன்னேன். அவர் இந்த பதிலை எதிர்ப்பார்க்காமல் கேமரா மேன் விட்டுட்டார். அப்போது அதிக சூடு இருக்கும் லைட்டை என் மீது காட்டி கஷ்டப்படுத்தினார் என்று தெரிவித்துள்ளார் நடிகை தாரணி.