நடிகை தேவயானி
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை தேவயானி. கவர்ச்சிக்கு முக்கியத்துவம் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள சிறந்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து மக்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகைகளில் ஒருவராக இருந்தார்.
அதிகமாக பாவாடை தாவணி அல்லது புடவையில் தான் பல படங்களில் நடித்திருப்பார். அதன்பின்னர் புது முக நடிகைகளின் வருகை, வயது அதிகரிப்பு போன்ற காரணங்களால் சினிமாவை விட்டு விலகி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இவ்வாறு வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்த அவர் சின்னத்திரையிலும் களமிறங்கி ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். இந்தநிலையில் அவர் 2001 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர்.
ஷாக்கான ரசிகர்கள்
அப்படி கொடி கட்டி பறந்த நடிகை தேவயானி எதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி உடன் இணைந்து சென்ற 27 ஆண்டுகளாக படங்களில் நடிக்கவில்லை என்பதற்கான காரணத்தை அண்மையில் ஒரு ப்ரெஸ் மீட்டிங் இல் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடிக்க சரியான கேரக்டர் கொண்ட கதை அவங்களுக்கு வரவில்லை என்று சொல்லி இருக்கிறார்.
அதுமட்டுமின்றி ரஜினி அவர்களின் பல திரைப்படங்களில் எனது கேரக்டர் செட்டாகாமலே இருந்தது அதனால் என்னால் அவருடன் இணைந்து நடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.