அசின் 2001 ஆம் ஆண்டு “நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா” என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். அவர் “அம்மா நன்னா ஓ தமிழா அம்மாயி” (தெலுங்கு, 2003), “கஜினி” (இந்தி, 2008) போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ் மற்றும் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார். ), மற்றும் “தசாவதாரம்” (தமிழ், 2008), நடித்துள்ளார்.
அவர் அமீர் கான், சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் உட்பட இந்தியத் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். அசின் தனது நடிப்பிற்காக பிலிம்பேர் விருதுகள் மற்றும் விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
திரையுலகில் வெற்றிகரமான வாழ்க்கைக்குப் பிறகு, 2015 ஆம் ஆண்டில் மொபைல் போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸின் இணை நிறுவனரான ராகுல் ஷர்மாவுடன் திருமணத்திற்குப் பிறகு அசின் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார். மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் அசின் குறித்த வதந்தி ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அசின் தனது கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்து உள்ளார் என்பது தான் அந்த வதந்தி.ராகுல் சர்மாவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது அதை அறிந்து அசின் கண்டித்த போதும் ராகுல் அந்த பெண்ணுடன் தொடர்பை கைவிடாததால் கோபத்தில் அசின் அவரை விவாகரத்து செய்து விட்டார் என்றும் தற்போது அவர் தனது பெற்றோர் வீட்டில் உள்ளார் என்ற செய்தி மிக வேகமாக பகிரப்பட்டு வந்தது.
இந்த விவாகரத்து செய்தியை கேள்விக்குட்படுத்தப்பட்ட அசின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். “எங்கள் கோடை விடுமுறையை கொண்டாடி வருகிறோம். இருவரும் நேருக்கு நேர் காலை உணவை என்ஜாய் செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில் முற்றிலும் கற்பனையான நியூஸ் ஒன்றை பற்றி அறிந்தோம்.
எங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து எங்களின் திருமணத்தை திட்டமிட்ட நேரத்தை பற்றி இந்த தருணம் நினைவூட்டுகிறது. நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோமென நியூஸ் சுற்றியது. தயவு செய்து வேறு ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள்.இதற்காக எங்களின் 5 நிமிடத்தை வீணடித்ததில் வேதனை. இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் நண்பர்களே! ” என பதிவிட்டு உள்ளார். இந்த ஆதாரமற்ற வதந்திக்கு அசின் ரியாக்ஷன் அவ்வளவே தான்.