அனசுயா பரத்வாஜ் தெலுங்கு திரை உலகில் தனது நடிப்பின் மூலம் முன்னணி நாயகியாக வரவேண்டும் என்ற கனவில் இருப்பவர். இவர் ஆரம்ப நாட்களில் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். இதனை அடுத்து 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகுக்கு அறிமுகமானார்.
இதனை அடுத்து இவர் 2018 ஆம் ஆண்டு ராம்சரண் மற்றும் சமந்தா நடிப்பில் வெளிவந்த ரங்கஸ்தலம் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தலின் மூலம் பிலிம் பேர் விருதினை தட்டிச் சென்றார்.
இதனை அடுத்து இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக்கி இருக்கும் புஷ்பா திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டம் படத்திலும்,சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த ஆச்சாரியார் படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை அனுசுயா கடந்த 2010 ஆம் ஆண்டு பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு கிட்டத்தட்ட 12 வயதுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் விவரம் தெரிந்த பையன்கள் இருவரும் உள்ளனர்.
இந்த நிலையில் அனுசுயா சமீபத்தில் சுற்றுலா சென்ற போது அங்கு அவர் தனது குடும்பத்தினருடன் அருவியில் குளிக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அவர் கிளாமர் உடை அணிந்து குளிக்கும் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.