நடிகை அனுஷ்கா
மாதவனுடன் ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனுஷ்கா, இதுவரை ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என தமிழின் முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கில் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘சூப்பர்’ படத்தில் நாகர்ஜுனுடன் இணைந்து நடித்த அனுஷ்கா, தமிழில் மாதவன் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘ரெண்டு’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு திரையுலகில் அனுஷ்காவிற்கு நல்ல மார்க்கெட் உருவானது.
ஆரம்பம் முதலே கவர்ச்சியான நடிப்பில் ரசிகர்களை கிறங்கடித்து வந்த அனுஷ்கா, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்துள்ளார். அவரது நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படம், பெரும் வரவேற்ப்பை பெற்றதுடன் மெகா வசூல் சாதனை படைத்தது.
பிரபாஸுடன், அனுஷ்கா இணைந்து நடித்த் அவர்களது நடிப்பில் வெளியான மிர்ச்சி, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்து அசத்தின. தமிழில் வேட்டைக்காரன், லிங்கா, சிங்கம், என்னை அறிந்தால், என டாப் ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு வந்தார் அனுஷ்கா.
அனுஷ்கா பேட்டி
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அனுஷா, வேட்டைக்காரன் படத்தின் என் ஊச்சி மண்டேலே என்ற பாடலின் ஷூட்டிங்கு செடிக்கு சென்று இருந்தேன். அங்கு அமர்ந்து விஜய் பார்த்து கொண்டு இருந்தார். ஷாட்டுக்காக நாங்கள் ஒன்றாக நின்றோம்.
ஷாட் ரெடியானதும் அவர் நடனத்தை பார்த்து நான் ஷாக் ஆகிவிட்டேன். என்னால் ஒண்ணுமே பண்ண முடியவில்லை. ஒரு முறை பார்த்துவிட்டு அவர் எப்படி அந்த மாதிரி நடனமாடினார் என்று எனக்கு தெரியவில்லை என அனுஷ்கா கூறியுள்ளார்.