நடிகை அஞ்சலி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை அஞ்சலி. ஆந்திராவில் பிறந்து வளர்ந்த அஞ்சலி 2007ம் ஆண்டு வெளியான “கற்றது தமிழ்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.
அதன் பின்னர் இவர் நடித்த “அங்காடி தெரு” படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து, நடிகை அஞ்சலிக்கு அடுத்தடுத்து நல்ல வரவேற்பு கிடைக்கவே, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. தமிழில், சுமார் 20 திரைப்படங்கள் வரை நடித்த அஞ்சலி திடீரென நடிப்பை ஓரம் கட்டிவிட்டு ஐதராபாத்’ல் செட்டில் ஆனார்.
இடையில் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்து வந்த அஞ்சலி ஒரே வீட்டில் இருவரும் இருந்து வந்துள்ளனர். அதன்பின் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
அவருடன் படுக்க வற்புறுத்திய இயக்குனர்
தன் வாழ்க்கையில் பல கொடுமைகளை சந்தித்ததாக பல பேட்டிகளில் அஞ்சலி ஓப்பனாக கூறியிருந்தார். முதல் வாய்ப்பு வரும் போது அஞ்சலியின் சித்தி நடிக்க சம்மதம் தெரிவித்ததோடு ஆபாச காட்சிகளில் நடிக்க வைக்காதீர்கள் என்று கேட்டிருந்தாராம்.
அப்படி அங்காடி தெரு படத்தில் நடித்து அவரது வாழ்க்கையை மாற்றியது. ஆனால், அப்படத்தில் சாலையில் படுத்திருக்கும் நபருடன் சேர்ந்து படுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இங்கே எப்படி படுப்பது கண்டிப்பாக என்றால் முடியாது என்றும் வேறுவழியில் எடுத்துக்கொள்ளலாம் என்று கெஞ்சி இருக்கிறார்.
கதைக்கு திருப்புமுனையாக இந்த காட்சி இருக்கும் என்றும் செட் அமைத்து செய்தால் தத்ரூபமாக இருக்காது என்றும் கூறியுள்ளனர். இதனை இந்த இடத்தில் செய்தாக வேண்டும் என்று கூறி வற்புறுத்தியதால் அதை நடித்து கொடுத்தேன் என்று அஞ்சலி கூறியிருக்கிறார்.