நடிகை அஞ்சலி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை அஞ்சலி. ஆந்திராவில் பிறந்து வளர்ந்த அஞ்சலி 2007ம் ஆண்டு வெளியான “கற்றது தமிழ்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.
அதன் பின்னர் இவர் நடித்த “அங்காடி தெரு” படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து, நடிகை அஞ்சலிக்கு அடுத்தடுத்து நல்ல வரவேற்பு கிடைக்கவே, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. தமிழில், சுமார் 20 திரைப்படங்கள் வரை நடித்த அஞ்சலி திடீரென நடிப்பை ஓரம் கட்டிவிட்டு ஐதராபாத்’ல் செட்டில் ஆனார்.
இடையில் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்து வந்த அஞ்சலி ஒரே வீட்டில் இருவரும் இருந்து வந்துள்ளனர். அதன்பின் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
ஓப்பன் டாக்
அது பற்றி கூறும் போது நடிகர் ஜெயுடன் லிவிங் டுகதர் முறையில் கிசுகிசுக்கப்பட்ட பிறகு அவரை பிரிந்து விட்டு தெலுங்கு திரை உலகில் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவியது. இதற்கெல்லாம் அஞ்சலி எந்த ரெஸ்பான்ஸ் செய்யவில்லை.
இப்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் திருமண சர்ச்சை குறித்து பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி உள்ளது.
இதற்கு காரணம் அஞ்சலி பேட்டியில் சொல்லும் போது எனக்கு மூன்று நான்கு முறை சமூக வலைத்தளங்களிலேயே திருமணம் செய்து விட்டார்கள். நான் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக முன்பெல்லாம் வதந்திகள் வரும் போது என் வீட்டில் கவலை அடைந்தார்கள்.