நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் முதல் முதலாக அட்டகத்தி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார்.
ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் நிறைய சன் டிவி ப்ரோக்ராம்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். மேலும் கலைஞர் தொலைக்காட்சியில் “மானாட மயிலாட” எனும் நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் முன்பு வெளிச்சத்திற்கு வந்தார்.
தற்போது தீரா காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும் காக்கா முட்டை எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்நாடு அளவில் அறிமுக நடிகைகளில் சிறந்த நடிகையாக விருதுகளை வாங்கினார்.
மேலும் இவருக்கு வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று நினைக்காமல் எல்லா வகையான கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதை அம்சமுள்ள படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
கசப்பான அனுபவம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ்
சமீபத்தில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பொது இடத்தில் தனக்கு நேர்ந்த அசவுகரியம் பற்றி பேசியிருந்தார். அவர் கூறியதாவது, நான் கல்லூரி படிக்கும்போது ஒரு நாள் என் தோழி வீட்டிற்கு சென்றுவிட்டு ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பும் போது என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார் ஒரு நபர்.
ஆட்டோ செல்ல செல்ல என்னை நெருக்கியபடி அமர்ந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் ஆட்டோ என்று கூட பார்க்காமல் அவர் என் மீது கையை வைத்தார்.
உடனே, ஆட்டோவை நிறுத்த சொல்லி என்ன அண்னா..? இப்படியான கஸ்டமர்களை ஆட்டோவில் ஏன் ஏற்றுகிறீர்கள் என கேட்டேன். அவரும் ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்துப்ப.. என்று சொல்லி திட்டி.. அவரை இறக்கி விட்டுவிட்டார் என தெரிவித்தார்.