நடிகை அபிராமி
குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. பின்னர் மலையாள சினிமாவின் பல படங்களில் முன்ணனி நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த அபிராமி தமிழில் அர்ஜுன் நடித்த வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முன்னொரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அபிராமி.
கமல், பிரபு, சரத்குமார் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை அபிராமி. இவர் நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
குறிப்பாக அவர் தமிழில் நடித்துள்ள சமஸ்தானம், விருமாண்டி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அபிராமி தமிழில் கடைசியாக நடித்திருந்த படம் 40 வயதினிலே அதன் பின்னரும் தற்போது கன்னடம் மலையாள படங்களில் நடித்து வருகின்றார்.
கூச்சத்துடன் ஒப்புக்கொண்ட..
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அபிராமிடம் இன்ஸ்டாகிராமில் பள்ளியில் படிக்கும் போது யாருக்காவது முத்தம் கொடுத்து இருக்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த அபிராமி தயக்கத்துடன் ஆம் என்று பதிலளித்திருக்கிறார். தற்போது, அந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.