தனுஷ் அமலா பால் மீது நடவடிக்கை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் சங்க தலைவர் முரளி ராமசாமி, துணைத்தலைவர்கள் தமிழ்க்குமரன், தலைவர் தயாரிப்பாளர்கள் உட்பட 400 தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்களின் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அதில், தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கி கொண்டு படப்பிடிப்பு, டப்பிங் வேலையில் தொடர்ந்து பிரச்சினை தந்து வரும் ஐந்து நடிகர்களை வைத்து படம் தொடங்குவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்பு கொண்டு ஒப்பந்தம் செய்ய பிறகு தொடங்க வேண்டும் என்றும் தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதாவது, கதயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டு பின்னர் கால் சீட் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகக் கூறி எஸ்.ஜே சூர்யா, சிம்பு, அதர்வா, விஷால், யோகி பாபு உள்ளிட்ட 5 பேருக்கு ரெட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
பரபரப்பை ஏற்படுத்தும் திரையுலகம்
இந்த தகவல் தமிழ் திரையுலகில் சற்று சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், மீண்டும் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. அதாவது, திரைப்படங்களில் நடிப்பதாக ஒப்புக்கொண்டு பின்னர் நடிக்காமல் போனதாக கூறி நடிகர் தனுஷ், நடிகை அமலா பால், ராய் லட்சுமி உள்ளிட்டவர்களிடம் தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் கேட்டுள்ளது.