நடிகர் விஷ்ணுகாந்த்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரஜினி, கோகுலத்தில் சீதை, என்றென்றும் புன்னகை, சிப்பிக்குள் முத்து, ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமாகியவர் நடிகர் விஷ்ணுகாந்த். சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடிக்கும் போது அவருடன் சேர்ந்து நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் திருமணம் செய்து தற்போது இரண்டு மாதங்கள் தான் ஆகின்றது. இருந்த போதிலும் இவர்களுக்கு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து விட்டனர்.
மேலும் இவர்களின் பிரிவை உறுதிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து திருமணத்தின் போது ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர்.
யார் தெரியுமா ..?
தற்போதைய நிலையில் இவர்கள் இருவரும் தங்களது கரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள் இருவரும் எப்போதும் போல தங்களுக்கான சீரியல்களில் நடித்து வருகின்றார்கள் இந்த நிலையில் விஷ்ணுகாந்த் அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெறுவது போன்ற ரீல்ஸ் பதிவிடப்பட்டுள்ளது.
இதனைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி என்ன மீண்டும் திருமணம் என்று கமெண்ட் செய்து வருகின்றார்கள் அதற்குப் பின்னர் தான் அது ஒரு சீரியல் இன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவாகும் என்று தெரியவந்துள்ளது இந்த ரிலீஸ் தற்போது சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டு உள்ளது