பிரஜன் – சாண்ட்ரா
தற்காலத்தில் சினிமா நடிகர்களைப் போலவே சீரியல் நடிகர், நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவ்வாறு மக்கள் மத்தியில் பிரபலமான சின்னத்திரை நடிகர்களில் ஒருவர் பிரஜன்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற தொடரில் நடித்து பெருமளவில் பிரபலமான அவர் தற்போது அன்புடன் குஷி என்ற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவரது மனைவி சாண்ட்ரா. இவரும் ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சிறந்த காதல் ஜோடிகளாக திகழ்ந்து வந்த இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருவருக்கும் அழகிய இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.
புகைப்படங்கள்
தங்களது குழந்தைகளுக்கு மித்ரா ருத்ரா என்று பெயர் வைத்துள்ள இந்த அழகிய ஜோடி சமீபத்தில் தங்களின் இரட்டை குழந்தைகளின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளனர்.
அதன்படி பிரஜன் சாண்ட்ரா ஜோடியின் இரட்டை பெண் குழந்தைகளின் 5 வது பிறந்த நாள் விழா கொண்டாட்ட புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.