நடிகர் மா. நா. நம்பியார்
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான பழம்பெரும் நடிகராக திகழ்ந்தவர் நம்பியார். இவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் பயணித்திருக்கிறார். இவர் குணச்சித்திர கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சொல்லப்போனால், தமிழ் திரை உலகில் வில்லன் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது நம்பியார் தான். அந்த அளவிற்கு கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தார் நம்பியார். மேலும் திரைப்படங்களில் வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் ஹீரோ என்று சொல்லலாம். இவர் சிறந்த ஆன்மீகவாதியாகவும் இருந்தார்.
1946 ஆம் ஆண்டில் தனது உறவினரான ருக்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர் தீவிர ஐயப்பன் பக்தர். தொடர்ந்து இவர் 65 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலைக்கு சென்று இருந்தார். பின் 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி உடல்நலம் உடல்நலக்குறைவால் இறந்தார்.
ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் கார்த்திகை மாதத்தில் அவர் மரணம் அடைந்ததால் ஐயப்பனின் திருவடிகளை அவர் அடைந்ததாகவே கூறி இருந்தார்கள்.
இவ்ளோ பெரிய நடிகையா?
இவரின் மூத்த மகன் சுகுமார் நம்பியார் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர். இரண்டாவது மகன் மோகன் நம்பியார் பிரபல தொழிலதிபர். மேலும் சினேகா நம்பியார் என்கிற மகளும் உள்ளார். இவரது மூத்த மகன் கடந்த 2012 ஆம் ஆண்டுகாலமானார். அதேபோல அவரது மனைவி ருக்மணி அம்மாவும் 2012 ஆம் ஆண்டு மறைந்தார்.