நடிகை கமலினி முகர்ஜி
உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் மாபெரும் ஹிட் திரைப்படமாக வெளியானது வேட்டையாடு விளையாடு. இந்த படத்தில் கமலஹாசனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை கமலினி முகர்ஜி. இவர் இந்தியில் அறிமுகமாகிய பின் தெலுங்கு மூலம் பிரபலமடைந்தார்.
தமிழில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு, இறைவி, காதல்னா சும்மா இல்ல போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்தவர். அவர் நடித்தது ஒரே ஒரு பாடல்தான் என்றாலும் ரசிகர்களின் மனதில் நின்றவர் கமலின். அந்த படத்திற்குப் பிறகு ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு தட்டிப்போகவே அதில் சினேகா நடித்தார். குடும்ப பாங்கான தோற்றம் கொண்ட கமலினிக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. கடைசியாக மலையாளத்தில் வெளியான “புலிமுருகன்” என்ற படத்தில் நடித்திருந்தார்.
சினிமாவே வேண்டாமென தெறித்து ஓடிய பிரபல நடிகை
அதுவும் படத்தில் கமலினி முகர்ஜி ஹீரோயினாக என்ரியாகும் சீனில் கமல் அவரை பார்த்து ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனே கல்யாணம் பண்ணிக்கலாமா என கேட்கும் காட்சி இன்றளவு வரை பேமசாக உள்ளது எனலாம்.
இந்த அளவிற்கு தனது அழகு மற்றும் நடிப்பால் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பல படங்களில் நடித்து ஒரு ரவுண்டு வருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் ஆளே இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் பொய் விட்டார் . என்னடா அந்த ஹீரோயின காணோம்னு பலரும் எண்ணி வந்த நிலையில் சரி மூட்டையை கட்டிட்டு ஊர பாத்து கிளம்பிட்டாங்க போல என நினைத்த நிலையில் மீண்டும் பல வருடங்கள் கழித்து காதல்னா சும்மா இல்லை மற்றும் இறைவி போன்ற படங்களில் நடித்து இருந்தார்.