பல வித்தியாசமான கதைகளில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜெயம் ரவி. கடந்த ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து அசத்திருப்பார்.
தமிழ் சினிமாவில் தற்போதும் முக்கியமான இடத்தில இருக்கும் ஜெயம் ரவி நல்ல படங்களை குறிவைத்து நடித்துவருகிறார்.இவருடைய கதைத்தேர்வு தனித்தன்மையுடன் இருப்பதால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே வைத்துள்ளார்.
தற்போது ஜெயம் ரவி இறைவன், சைரன் போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.நடிகர் ஜெயம் ரவி 2009 -ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
அப்பாவின் 50வது திருமண நாளை…
தற்போது இவர் பிரதர் படத்தில் நடித்து வருகிறார்.இவர் தனது அப்பாவின் 50வது திருமண நாளை கொண்டாடி வெளியிட்டுள்ள பழைய புகைப்படங்கள் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.