தனுஷ்
தமிழ் சினிமாவில் இன்று பிரபலமான நடிகராக பார்க்கப்படுபவர் தனுஷ். இவர் ஆரம்பத்தில் நடிக்க வந்து போது இதெல்லாம் ஒரு மூஞ்சி இவன் ஹீரோவா என பலரும் கிண்டலும், கேளியும் பண்ணினார்கள். இதற்கு பதிலடி கொடுக்க படிப்படியாக தனது திறமையை வளர்த்து வெற்றி படங்களை கொடுத்தார். ஒரு கட்டத்தில் வெற்றிமாறன் உடன் கைகோர்த்து பொல்லாதவன்,
ஆடுகளம், அசுரன் என பல வெற்றி படங்களை கொடுத்து பெயரையும் புகழையும் சம்பாதித்தார் இப்படிப்பட்ட தனுஷ் கடைசியாக நடித்த வாத்தி படம் 100 கோடி வசூல் அள்ளியது. அடுத்தாக அருண் மாதேஸ்வரன் உடன் கூட்டணி அமைத்து “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளிவந்து பெரிய அளவில் வைரலானது இதனை தொடர்ந்து தனுஷ் தனது 50 வது படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தை அவரே இயக்கி நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் படத்தை மிகப் பிரமாண்ட பொருட்டுச் செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
சூப்பர் ஸ்டாரின் குடும்பம்
மனைவி இயக்கிய லால் சலாம் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் “லால் சலாம் டுடே” என்று ட்விட் செய்திருந்தார் தனுஷ். குறிப்பாக மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கு தான் தனுஷ் இப்படி தூது விட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது . அதோடு ஐஸ்வர்யாவும், தனுசுடன்,
சேர்ந்து வாழ வேண்டும் ,அப்போதுதான் அப்பா சந்தோஷப்படுவார் என்று முடிவெடுத்திருக்கிறாராம் .குறிப்பாக தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்வதற்கு முக்கிய காரணமே அவர்களுடைய மகன்களுக்காக தானாம் . இதனால் சூப்பர் ஸ்டாரின் குடும்பமே சந்தோஷத்தில் இருந்து வருகிறார்களாம்.