நடிகர் அஜித்
பிரேம புஸ்தகம் என்னும் படத்தின் மூலம் திரையுலகத்திற்கு என்ட்ரி கொடுத்தார் நடிகர் அஜித். அதன் பிறகு அமராவதி, காதல் கோட்டை, காதல் மன்னன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக உருவானார் அதன் பிறகு தீனா, மங்காத்தா போன்ற ஆக்சன் படங்களில் நடித்து அல்டிமேட் ஸ்டார் ஆக வளம் வந்தார்.
சூப்பர்ஸ்டார் ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக்கில் நடித்தார். படம் பெரிய வெற்றியை பெற்றது. ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். மங்காத்தா படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தார். அன்றிலிருந்து அஜித் உடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது.
இன்று டாப் நடிகராக வரும் விஜய்க்கு போட்டியாக இருந்து வருகிறார். விஜயின் வாரிசு படம் வெளியான போது தனது துணிவு படத்தை துணிந்து வெளியிட்டார். அந்த படமும் நல்ல வசூலை பெற்றது. இப்போது விடாமுயற்சிக்கு தயாராகி வருகிறார்.
ஷாக் ஆகும் ரசிகர்கள்
இவ்வாறு இருக்கும் நிலையில் நடிகர் அஜித்குமார் அவர்கள் ஒருதலையாக ஒருவரை காதலித்து வந்துள்ளார் அவர் யார் என்று விவரம் தற்போது தெரியவந்துள்ளது. இதனை கூறியவர் பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அவர்கள் தான்.
1996 ஆம் ஆண்டு வெளிவந்த வான்மதி என்னும் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து வந்தவர் தான் நடிகை சுவாதி அவர்கள் இவரை நடிகர் அஜித் அவர்கள் ஒருதலையாக காதலித்து வந்ததாக அவர் கூறியிருக்கிறார் .