நடிகை பிரியங்கா மோகன்
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா மோகன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருந்து வருகிறார் பிரியங்கா மோகன்.
இவர் சிவகார்த்திகேயனுடன் டாக்டர் மற்றும் டான் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படங்கள் இவருக்கு பெயர் பெற்று தந்திருக்கிறது.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் குறித்து சர்ச்சையை கிளப்பியிருந்தார் இசையமைப்பாளர் டி இமான். இதில் தவறு யார் மீது என்று இப்போது வரை தெரியவில்லை . இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் அதற்கு அடிமையாகி விட்டார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை பிரியங்கா மோகன் .
பேட்டி
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரியங்கா மோகனிடம் சிவகார்த்திகேயன் பற்றிய ரகசியம் ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டுள்ளனர் . அதற்கு யோசித்த பிரியங்கா மோகன் , சிவகார்த்திகேயனுக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும் . இன்னும் சொல்லப்போனால், அவர் அதற்கு அடிமையாகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் .
குறிப்பாக படப்பிடிப்பு நேரங்களில் ஏதாவது இனிப்பை சாப்பிட்டு கொண்டே இருப்பார் , எங்களையும் சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்துவார் என்று கூறியிருந்தார் நடிகை பிரியங்கா மோகன்