பிரியங்கா நல்காரி
சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் ரோஜா. இந்த தொடர் செம்ம ஹிட்டாகி டிஆர்பியிலும் முன்னணியில் வந்து பெருமை சேர்த்தது. ரோஜா தொடரில் அர்ஜுனாக சிப்பு சூரியன் மற்றும் ஹீரோயின் ரோஜாவாக பிரியங்கா நல்காரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
பிரியங்கா தெலுங்கில் வெளிவந்த அந்தாதி பந்துவய என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், தெலுங்கு சீரியலிலும் நடித்துள்ளார்.
மேலும் அவர் தமிழில் வெளிவந்த காஞ்சனா 3 திரைப்படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் ரோஜா சீரியலில் நடித்த பிறகுதான் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
சோஷியல் மீடியாவிலும் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்களும் உள்ளனர். அண்மையில் இவர் ராகுல் என்ற பிசினஸ் மேனை கோவிலில் வைத்து திடீரென திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகின.
தீயாய் பரவும் போட்டோஸ்
திருமணம் முடிந்து 7 மாதங்கள் ஆகின்ற நிலையில் தற்போது தன்னுடைய திருமணத்தின் ஏழாவது மாதத்தை கொண்டாடும் விதமாக கணவருடன் நீச்சல் குளத்தில் குதூகலமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர்களுடைய ஏழாவது மாத திருமணத்திற்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மட்டுமில்லாமல் பிரியங்கா நல்காரி மற்றும் ராகுல் வர்மா ஜோடிக்கு லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.