ஆத்மிகா
தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கி கொண்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன் 3 மற்றும் மெரீனா போன்ற படங்களின் மூலம் அறிமுகமானாலும் இவர் அறிமுகமானது ‘மனம் கொத்தி பறவை ‘ என்ற படத்தின் மூலம் தான்.
கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஆத்மியா.
சொல்லப்போனால் சிவகார்த்திகேயனுடன் கதாநாயகியாக நடித்த நடிகைகளில் பட வாய்ப்புகளே இல்லாமல் போன நடிகை என்றால் அது இவர்தான் என்று கூட சொல்லலாம்.
மனம் கொத்தி பறவை படத்திற்க்கு பிறகு தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படம் சொல்லிக்கொள்ளும் அளவு ரீச் ஆகவில்லை. அதன் பின்னர் இவருக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்பு வரவில்லை.
என்ன இப்படி மாறிவிட்டார்?
மேலும் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் படங்களில் நடிக்கவில்லை. தற்போது வெளியான அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆத்மிகா இது.? என்று ஆச்சரியத்தில் உள்ளார்கள். தற்போது இவர் திருமணம் முடித்து கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.