சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் இமான் இடையே எழுந்துள்ள பிரச்சனை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இசையமைப்பாளர் இமான் சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து இமான் மனைவி அவரை பிரிந்து சென்றதற்கு காரணம் சிவகார்த்திகேயன் தான் என்று பலரும் இணையத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
ஒரு பெரிய இசையமைப்பாளர், சினிமாவில் நல்ல அந்தஸ்தில் இருக்கக்கூடிய தன்மீது துரோகம் செய்துவிட்டதாக புகார் கொடுத்திருக்கிறார். இணைய பக்கங்களில் இந்த விவாதம் ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது.
ஆனால் இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை வாய் திறக்கவே இல்லை. மாறாக சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக டி. இமானின் மனைவி மற்றும் சிவகார்த்திகேயனின் சகோதரி கௌரி மனோகரி ஆகியோர் தங்களுடைய கருத்தை சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பதிவு செய்து வருகின்றனர்.
பேட்டி
வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இமான், இனி இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன்.
ஒருவரை நம்பி வீட்டிற்குள் அழைத்தால் அதற்கான மரியாதையை அவர் காப்பாற்றி இருக்க வேண்டும். இந்த தப்பை எல்லாம் மறைக்க சிவகார்த்திகேயன் பல கோடி இறைத்து அப்படியே மூடிமறைத்திருக்கிறார்.
தன்னை பற்றி மோசமான செய்தி வந்தால் கூட அதற்கான நடவடிக்கை எடுத்து பணத்தால் அதை நிறுத்தி வரும் வேலையை செய்து வருகிறார் என்று வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருக்கிறார்.