நடிகர் ராஜா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ராஜா. பாக்கு வெத்திலை என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கடந்த 1981 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கடலோர கவிதைகள் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
இவரது இயற்பெயர் வெங்கடேஷ். படத்திற்காக தனது பெயரை ராஜா என மாற்றிக்கொண்டார். பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக முரளி நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான கண்னுக்கு கண்ணாக என்ற படத்தில்தான் கடைசியாக நடித்திருந்தார்.
அதன்பிறகு சுமார் 19 வருடங்களாக எந்த ஒரு சினிமாவிலும் இவர் நடிக்கவில்லை. இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ராஜா, நான் சினிமாவில் முதலில் நடிக்க வந்தபோது இந்த அளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை அதைத்தாண்டி நான் ஆரம்பித்த தொழிலும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து திரையுலகில் முன்னணி
வாயடைத்து போன ரசிகர்கள்
நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சீயான் விக்ரமும் நானும் மிக நெருங்கிய நண்பர்கள் இப்படி இருக்கையில் அவரிடம் இருந்து எனக்கு ஒரு நாள் கால் வந்தது அதில் அவர் என்னிடம் எனது தொழில் மற்றும் குடும்பம் பற்றி முதலில் விசாரித்த பின்னர் என்னிடம் என உதவி வேண்டும் என கேட்டார்.
ஒன்றும் புரியாத நிலையில் அவரிடம் என்ன என கேட்டதற்கு என மகனின் முதல் படத்தில் அப்பாவாக நடிக்க முடியுமா என கேட்டார் நானும் அதை மறுக்க முடியாமல் ஒப்புக்கொண்டு நடித்து கொடுத்தேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வைரளாகி வருகிறது.