நடிகை வரலட்சுமி சரத்குமார்
தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இப்படத்தினை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஷாலுடன் இணைந்து சண்டக்கோழி, விஜய் உடன் இணைந்து சர்க்கார் சசிகுமாருடன் இணைந்து தாரைதப்பட்டை போன்றவர்களுடன் நடித்து தமிழ் சினிமா தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
சமீப காலமாக சரியான கதைகள் இல்லாததால் வரலட்சுமி சரத்குமார் படங்களில் நடிக்காமல் இருந்து வந்ததால் உடல் எடையை அதிகரித்தது. இதனையடுத்து அவர் தற்போது உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போய் உள்ளார்.
அதிர்ச்சியில் ரசிகர்கள்
இப்போது வரலட்சுமி பத்திரிகையாளர்களை சந்தித்து நடிகைகளுக்கு சினிமா துறையில் பாலியல் தொல்லை நடப்பது பற்றி பேசி இருந்தார். அதில் எனக்கே பாலியல் சீண்டல்கள் நடந்திருக்கிறது. பிரபல ஹீரோ ஒருவர் மற்றும் முன்னணி இயக்குனர் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்ன்ட் பண்ண முடியுமா..?என கேட்டிருக்கிறார்கள்.
அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமென்றால் அப்படி என்ற பட வாய்ப்புகள் வேண்டாம் என மறுத்து விடுவேன்.
எனக்கு மன நிம்மதியுடன் இரவில் தூங்க வேண்டும் என்பதற்காக மட்டும் தான் இப்படி ஒரு பதிலை கூறினேன், ஆனால் ஒரு சினிமா முன்னணி நடிகரின் மகளுக்கே இப்படி என்றால் மற்றவர்களுக்கு சொல்லவே தேவையில்லை என்பது தான் உண்மை.