Connect with us

சிவகார்த்திகேயன் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம்.. சொன்னா குழந்தைகள பாதிக்கும்..! குமுறிய டி.இமான்..!

sivakarthikeyan 1

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம்.. சொன்னா குழந்தைகள பாதிக்கும்..! குமுறிய டி.இமான்..!

நடிகர் சிவகார்த்திகேயன்

எந்த திரைப்பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் முதல் முதலில் ஸ்டார் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாம்பியன்

sivakarthikeyan002

பட்டத்தை வாங்கினார் அதோடு விஜய் டிவியில் அது இது எது என்ற நிகழ்ச்சியில் VJ- வாக தொகுத்து வழங்கினார் பின்னர் இவர் திறமையைக் கண்டு இயக்குனர் பாண்டியராஜ் மெரினா படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு அளித்தார்.

sivakarthikeyan004

தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தபடாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, டாக்டர் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.நடிப்பையும் தாண்டி தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி

22 635fda1da5985

அதிலும் வெற்றி பயணத்தை துவக்கியுள்ளார். மேலும் பாடலாசிரியாகராகவும் வலம் வருகிறார். இப்படி தன் திறமையை வெளிப்படுத்தி பன்முக திறமை மூலம் வெற்றி கொடி நாட்டி வருகிறார்.

குமுறிய டி.இமான்

தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டு இருப்பது தான் சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை.

imman sivakarthikeyan

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இமான், என் படத்துல தான் சிவகார்த்திகேயன்பாடகராக அறிமுகமானார். ஆனால் இனி இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன். அடுத்த ஜென்மத்தில் வேண்டும் என்றால் அவர் பாட்டுக்கு இசையமைக்கலாம்.

imman sivakarthikeyan issue

அவர் எனக்கு செய்தது மிக பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்லக்கூட முடியாது. என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமைதியாக இருக்கிறேன் என்று கூறி இருந்தார். தற்போது இமானின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top