நடிகை சுகன்யா
தமிழ் சினிமாவில் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சுகன்யா. அதனைத் தொடர்ந்து அவர் நடிகர் பிரபு, சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை சுகன்யா வெள்ளித்திரையில் மட்டுமின்றி தமிழில் சின்னத்திரையிலும் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார்.
பரத நாட்டிய கலைஞரான இவர் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். கடவுள் பக்தி ஆல்பங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். நடிகை சுகன்யா கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இவர்களது திருமண வாழ்க்கை ஒரு ஆண்டு மட்டுமே நீடித்தது. கணவரை பிரிந்த அவர் மீண்டும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார். மேலும் அவர் சினிமாவில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார்.
சுகன்யாவின் மகள்
சுகன்யா தன் மகளை சினிமாத்துறையை சாராமல் வளர்த்தார். சுகன்யாவின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட வெளியில் தெரியவில்லை. சுகன்யா மற்றும் அவரது குழந்தையின் புகைப்படம் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளிவந்தது. இதைப் பார்த்த பலரும் இது நடிகை சுகன்யாவின் மகள் என்று யூகித்தனர். ஆனால் சுகன்யாவின் மகள் என்ன செய்கிறாள்? படங்களில் நடிக்க விருப்பமா? மற்ற விவரங்கள் தெரியவில்லை.