நடிகை சினேகா
2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.
பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.
நான் காட்டுறேன்.. நீங்க பாக்குறீங்களா..
சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சினேகாவிடம் பேட்டியொன்றில், ஹீரோக்களுக்கு நீங்கள் அக்காவை போல் இருக்கிறீர்கள் என்று கூறி வருவது பற்றி கேட்கப்பட்டது. இதனால் கோபப்பட்ட சினேகா, நீங்கள் யாருக்கு அக்கா மாதிரி இருக்கேன் என்று கூறுகிறீர்கள் என்றும் இப்போது வரை இளமையுடன் தான் இருக்கிறேன், உடலையும் குறைத்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கும் என்னை நீங்கள் எப்படி அக்கா போல் காட்சியளிக்கிறேன் என்று கூறலாம். மேலும், சூர்யா, ஜீவா, ஜெய், சிவகார்த்திகேயனுடன் நடித்திருப்பதை தான் தொகுப்பாளர் கேட்டேன் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு சினேகா, ஷாம்க்கு ஜோடியாகவும் தனுஷுக்கு ஜோடியாக இருந்திருக்கிறேன், அதற்கு என்ன சொல்கிறீர்கள். தனுஷும் என்னுடன் நடித்த நடிகைகளில் சினேகா தான் சரியான ஜோடி என்று கூறியிருக்கிறார். அதற்கான ஆதாரத்தை காட்டுகிறேன் நீங்கள் பார்க்கிறீர்களா என்று தொகுப்பாளரிடம் கோபப்பட்டு இருக்கிறார்.