ரேஷ்மா
மாடல் அழகியாக இருந்து பின்னர் நடிகையானவர் ரேஷ்மா. இவர் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்தாலும் சின்னத்திரை சீரியலின் மூலம் பிரபலம் ஆனார். சீரியலில் நடிப்பதற்கு முன்பு “பிக் பாஸ்” சீசன் 3 ல் கலந்து கலந்து கொண்டார்.
விஷ்னு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த இவர், விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
பின்னர் மீண்டும் சின்னத்திரையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து ஒட்டுமொத்த இல்லத்தரசிகளிடையேயும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார்.
ரேஷ்மாவுக்கு சொந்த வாழ்க்கையில் பல சோகங்கள் உண்டு. ஆம், தனது கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
எல்லை மீறி நடந்து கொள்ளும் நடிகை
இந்த நிலையில் இவர் தற்போது பகிர்ந்துள்ள ரீல்சில் நான் கிசுகிசுகளையும் வதந்திகளையும் பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன் என்று தலைப்பு கொடுத்துள்ளார் இதனை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.