நடிகர் ரகுவரன்
வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகர் ரகுவரன். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ரகுவரனை ஹீரோவாகும் வில்லனாகும் அறிந்த பலருக்கு அவர் இசையமைப்பாளர் என்பது தெரியாது.
சிறுவயது முதலே இசை மீது கொண்ட ஆர்வத்தால் லண்டன் இசைக் கல்லூரியில் படித்து உள்ளார். இதுவரை ரகுவரன் 30 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ரகுவரன் சம்சாரம் அது மின்சாரம் என்ற படத்தில் விசுவின் மகனாக சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தில் சிக்கனப் பேர்வழியாக நடித்திருந்தார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
முதல்வன் திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த வில்லன் காண தமிழக அரசு விருதைப் பெற்றார். வில்லன் என்றாலே கட்டுமஸ்தான உடலும், கம்பீரமான குரலும் இருக்கவேண்டும் என்ற டிரெண்டை மாற்றி, ஒல்லியான உடல் அமைப்பில் மெல்லிய குரலோடு வில்லத்தனத்தை சினிமாவிற்கு கொண்டு வந்தார் ரகுவரன்.
நடிகர் ரகுவரன் மகன்
நடிகை ரோகினி மற்றும் ரகுவரன் 1996 இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் 2004 இல் பிரிந்தனர். சாய் ரிஷிவரன் என்பது அவர்களது மகனின் பெயர். நடிகர் ரகுவரன் மகன் தனது தந்தையின் பெயரை வைத்துக்கொண்டு தனது அனைத்து வேலைகளையும் எப்போதும் செய்து முடித்துள்ளார்.
சமீபத்தில், ரகுவரன் மகன் அதே பெயரில் ஒரு ஆல்பம் பாடலை வெளியிட்டார். அவர் சிறு குழந்தையாக இருந்தபோது, அவருக்கு 30 வயது இருக்கும்.
இவர்களின் பார்வையை தொடர்ந்து ரகுவரன் மகனா நன்றாக முதிர்ச்சியடைந்து அடுத்த ஹீரோவுக்கு தயாராகிவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.ஆனால் ரகுவரனின் மகனுக்கு இசை மீது தான் ஆசை அதிகம் உள்ளதாம்,சமீபத்தில் பேட்டி கொடுத்த ரகுவரனின் மனைவி கூறியுள்ளார்.