நடிகை ரோஜா
1992ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ரோஜா. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இவர். இவரது முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடிக்க தொடங்கினர் நடிகை ரோஜா.
ரஜினி, கார்த்திக், பிரபு என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ள ரோஜா 90 இல் முன்னணி நடிககைகளில் ஒருவராக இருந்தவர். இந்நிலையில் தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குனர் ஆர்.கே செல்வமணியை கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பள்ளிப்படிப்பை முடித்ததும் நடிகை ரோஜாவின் மகள் அம்மாவைப் போலவே நடிக்க வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கண்ணீர் மல்க பேசிய நடிகை ரோஜா
சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் ரோஜாவை அசிங்கப்படுத்தி பேசியது ஆந்திராவை அதிர்ச்சியாக்கியது. தற்போது நடிகை ரோஜா அதுகுறித்து பேசி கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். அதில், தான் நடித்த படத்தில் நிர்வாணமாக நடித்ததாக கூறி சித்திரவதை செய்கிறார்கள் என்றும் சட்டசபையில் சீடிக்களும் காட்டப்பட்டது.
அந்த சீடியில் இருப்பது நான் தான் என்று நிரூபிக்கவும் இல்லை. என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? உங்க வீட்டு பெண்களை இப்படி பேசினால் எப்படி இருக்கும் என்று பேசியிருக்கிறார்.
என்னை அயர்ன் லெக் என்று கேலி செய்தார்கள். உங்கள் கட்சியில் இருக்கும் போது நல்லவராகவும், வேறு கட்சியில் இருக்கும் போது கெட்டவலாகவும் நான் எப்படி இருக்க முடியும், பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி பேசியது என்னை புண்படுத்திருக்கிறது என்று ரோஜா கண்ணீருடன் பேசியிருக்கிறார்.