பிக்பாஸ் சீசன் 7
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இரண்டு வீடுகளில் நடக்கவிருக்கும் இந்த சீசனின் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்தார். அவரை கமல் ஹாசன் வாழ்த்தி அனுப்பிவைத்தார். கூல் சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்ததும் அதனை பார்த்து ரொம்பவே ஆச்சரியப்பட்டார். பிறகு கன்ஃபெஷன் ரூமுக்கு பிக்பாஸ் அழைத்து ரூல்ஸ்களை கூறினார்.
கன்ஃபெஷன் ரூமுக்கு வந்த அவரிடம் பிக்பாஸ் பேசுகையில், “இத்தனை சீசன்களில் முதலில் வீட்டுக்குள் வந்து தெளிவா பதில் சொன்னது நீங்கள்தான். அதேபோல் இந்த சீசனின் முதல் கேப்டன் நீங்கள்தான்” என்றார். கமலிடம் பேசிய சுரேஷ், நான் முதல் போட்டியாளராக போகப்போவதை நினைத்தால் பதற்றமாகத்தான் இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 7 உள்ள போறது ஏழரை.
என்ன நடக்கப்போகுதோ. வெந்து தணிந்தது காடு கமல் சாருக்கு வணக்கத்தை போடு என்று தனது ட்ரேட் மார்க் வசனத்தை பேசிவிட்டு உள்ளே சென்றார்.
முதல் கேப்டன் யார்.?
இதையடுத்து, இரண்டாவது போட்டியாளராக பூர்ணா ரவி நுழைந்துள்ளார். ஐடியில் வேலை பார்த்து வந்த இவர் சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் வீட்டிற்கு வந்துள்ளார். வேலூரைச் சேர்ந்த இவர், தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். என் வாய் தான் என் ஆதாரம் என்று ஆரம்பத்திலேயே அலப்பறை கொடுத்தார்.
வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாரத்திற்கு பிறகு தான் கேப்டன் பதவிக்கான போட்டி நடத்தப்படும். ஆனால், இந்த முறை முதல் நாளே கேப்டன் பதவிக்கான சண்டையை மூட்டிவிட்டுள்ளார். கூல் சுரேஷ் வந்ததுமே பிக் பாஸ் வீட்டின் முதல் கேப்டன் நீங்க தான்.
ஆனால், அடுத்து உள்ளே வரும் போட்டியாளரின் ஐந்து நிமிடம் விவாதம் செய்து அந்த கேப்டன் பதவியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை கூறினார் பிக் பாஸ்.