கவுண்டமணி
தமிழ் சினிமாவில் இன்று ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் உள்ளனர். ஆனால், 80 , 90 களில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை நகைச்சுவை நடிகர்கள் என்றாலே அது நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் தான். இவர்களை திரையில் பார்த்தாலே அனைவருக்கும் சிரிப்பு வந்துவிடும்.
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல்வேறு நகைச்சுவை காட்சிகள் இன்று வரை மிகவும் பிரபலம். அதில் குறிப்பாக கரகாட்டக்காரன் படத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து கலக்கிய வாழைப்பழ காமெடி மற்றும்
சொப்பன சுந்தரி காமெடி இரண்டும் இன்றுவரை பிரபலம் எனலாம். தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த இவர்கள் தற்போது என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போய்விட்டது.
இலவச மருத்துவம்
நடிகர் செந்திலின் மகன் குறித்து பலரும் அறியாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் சொந்தமாக சாலிகிராமத்தில் தான் மருத்துவமனையை வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு ‘உன்னை எனக்கு பிடிச்சிருக்கு’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக என்று குறிப்பிடத்தக்கது.
பின் இவர் ஜனனி என்பவரை திருமணம்செய்து கொண்டார். இவரும் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார்.