மகாநதி சங்கர்
நடிகர் சங்கர் கமல் நடித்த மகாநதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது வரைக்கும் மகாநதி சங்கர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். ஒரு சிலருக்கு தான் தாங்கள் நடித்து பிரபலம் அடைந்த திரைப்படங்களின் பெயர்கள் அடைமொழியாக மாறிவிடுகிறது.
அந்த மாதிரி தான் நடிகர் மகாநதி சங்கரும் வந்திருக்கிறார். நடிகர் கமல் நடித்த மகாநதி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி முதல் திரைப்படத்திலேயே தனக்கான ஒரு அங்கீகாரத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்.
அதற்கு பிறகு நடிகர் ரஜினியோடு பாட்ஷா திரைப்படத்திலும், நடிகர் சரத்குமாரின் ரகசிய போலீஸ், கமலஹாசன் உடன் இந்தியன் திரைப்படம், அதுபோல அஜித்தின் தீனா உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் சின்னத்திரையிலும் ஒரு சில சீரியல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக சன் டிவியில் பல வருடங்களாக ஓடி அனைவருடைய மனதை கவர்ந்த நாதஸ்வரம் சீரியலிலும் இவர் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
குடும்ப புகைப்படம்
சமீபத்தில் மகாநதி சங்கர் தன்னுடைய இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் மற்றும் தன்னுடைய மனைவியோடு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மகாநதி சங்கருக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.