நடிகை எஸ்தர்
இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வருகிறார், நடிகை எஸ்தர் நோரன்ஹா. தமிழில், பிரபு, ஜெயராம் நடித்த மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அவர், மேலும் சில படங்களில் நடிக்க இருக்கிறார்.
கன்னடப் படங்களிலும் நடித்து வரும் இவர், கடந்த சில வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. எஸ்தர் நோரன்ஹா சிறந்த பாடகியும் கூட. இவர் சில படங்களில் பின்னணி பாடல்கள் பாடியுள்ளார். கொங்கனி படங்களில் பாடியுள்ள அவர், ஏராளமான மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
இவர் தெலுங்கு மற்றும் கன்னட படத்திலும் நடித்து வருகிறார். கடந்த 2019 ஆம் வருடத்தில் பாடகரான நோயல் சீன் என்பவரை காதலித்து செய்து, ஒரு வாரத்தில் விவாகரத்தும் பெற்றார்.
விளாசும் ரசிகர்கள்
இந்நிலையில், பிரபல நடிகை எஸ்தர் நோரன்ஹாவும் தெலுங்கு பட உலகில் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளும்படி தன்னை பலர் அணுகியிருக்கிறார்கள் என்று புகார் தெரிவித்திருக்கிறார்.
திரைத்துறையில் படவாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருந்து வருவதாக பல நடிகைகள் பகிரங்க குற்றச்சாட்டை மீ டூ என்ற ஹேஷ்டேக் வாயிலாக முன்வைத்து இருந்தனர். இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் நடந்த பாலியல் சர்ச்சை தொடர்பாக நடிகை பரபரப்பு தகவலை பகிர்ந்துள்ளார்.
அதிலும் குறிப்பாக தன்னைவிட வயதில் இளைய நபருடன் உறவு கொள்வது போன்ற காட்சிகளில் நடித்து மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது.
இதனை குறிப்பிட்டு, ஒரு பக்கம் படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதா.? என்று கூறுகிறீர்கள்.. மறுபக்கம் இப்படியான படங்களில் நடிக்கிறீர்கள்..? என்ன உங்கள் விவகாரம்.. என்று விளாசல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.