சில்க் ஸ்மிதா
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர் சில்க் ஸ்மிதா. ரஜினி, கமல் போன்ற தமிழ் சினிமாவின் பிரபலங்களின் படத்தில் பல்வேறு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சில்க் ஸ்மிதா.
80களில் இருந்து 90கள் வரை ஹீரோக்கள் பின்னால் சுற்றிக்கொண்டிருந்த ரசிகர்களை எல்லாம் தன்னை காணத் தவம் கிடைக்க வைத்தவர் சில்க் ஸ்மிதா இவர் தனது 17 ஆண்டுக்கால சினிமா வாழ்வில், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 450 படங்களில் நடித்துவிட்டார்.
ஆனால் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர் 1996ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் உலகை விட்டு மறைந்த பின்பு சினிமாவில் அவரது இடத்தை நிரப்ப இன்று வரை யாருமே வரவில்லை. அவரது குரல், நடனம், பார்வை எல்லாவற்றிற்கும் இன்றைய இளைஞர்கள் கூட அடிமை. அவரது இடத்தை பிடிக்க மும்தாஜ், முமைத்கான் எனப் பலர் முயற்சி செய்தனர்.
பிணத்துடன் காமமா?
இந்த நிலையில், கவர்ச்சி நடிகையாக இருந்த சில்க் ஸ்மிதா அவர்கள் இறந்த பின்னர் பிணவறையில் வைத்து சில் தவறாக நடந்து கொண்டதாக விமர்சகர் பயில்வான் அவர்கள் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
இதனை 27 ஆவது நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நடத்தப்பட்ட பேட்டியிலேயே இவர் இது போன்ற கருத்துக்களை கூறியுள்ளார். அத்துடன் பயில்வான் கூறிய செய்தி எந்தளவு உண்மை என யாருக்கும் தெரியாத நிலையில், சில்க் ஸ்மிதாவின் மரணத்திற்கு பின்னர் பிணவறையில் என்ன நடந்தது? என தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளார்கள்.