ஹேமா ராஜ்குமார்
விஜய் டிவியில் தற்போது பிரபலமாக மாறி இருக்கும் இந்த பாண்டியன் ஸ்டோர் டிஆர்பி ரேட்டை எகிற வைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சீரியலில் நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மயிலாடுதுறையில் பிறந்தவர்.
எம் சி ஏ பட்டப்படிப்பை முடித்த இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் தனது ஊடகப் பணியை 22 வயதில் துவங்கியிருக்கிறார். முதல் முதலாக இவர் பெப்பர்ஸ் டிவியில் பணியாற்றி இருக்கிறார்.
இவர் சீரியல்களில் நடிப்பதோடு மட்டுமின்றி யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் முக்கியமான வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் பதிவிடக்கூடிய வீடியோக்களை பார்ப்பதற்கு என்று தனியாக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இவர் 2015 ஆம் ஆண்டு விஷால் மற்றும் காஜல் அகர்வால் நடித்த பாயும் புலி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் ஆறாது சினம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இது தான் காரணம்..
அவ்வப்போது பேட்டிகளில் கலந்து கொள்ளும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவருடைய பழைய புகைப்படங்களை காட்டி அந்த புகைப்படங்கள் எடுக்கும் பொழுது ஏற்பட்ட அனுபவம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முதலிரவு காட்சியில் நடித்திருந்த இவருடைய புகைப்படத்தை காட்டி இந்த காட்சி குறித்து உங்களுடைய அனுபவம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் எனக்கும் என்னுடைய ஜோடிக்குமான முதல் இரவு காட்சி. இதுதான் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை நான் இப்போது சொல்கிறேன்.
அன்றைய தினம் அந்த முதலிரவு காட்சி படமாக்கப்பட வேண்டிய அறையில் வேறொரு படத்தின் வேறு ஒரு காட்சியின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இந்த காட்சி இன்னும் இரண்டு நாட்களில் ஒளிபரப்பாக வேண்டியது. இப்போது விட்டால் இந்த காட்சியை படமாக்குவதற்கு மேலும் இரண்டு நாட்கள் ஆகும் என்பதால் அன்று நடுரோட்டில் படுக்கையரை போன்ற ஒரு செட் அமைத்து இந்த காட்சியை படமாக்கினோம்.