Connect with us

என் புருஷனுக்கு பாசம் காட்ட தெரியாது.. ஆனா.. மனமுடைந்து அழுத மாரிமுத்து மனைவி..!

0dec5138 aeb6 48a4 b7cd 72d7245477c3 1

சினிமா செய்திகள்

என் புருஷனுக்கு பாசம் காட்ட தெரியாது.. ஆனா.. மனமுடைந்து அழுத மாரிமுத்து மனைவி..!

நடிகர் மாரிமுத்து

தேனி மாவட்டம் வருஷநாடு பகுதி பசுமலையை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் மாரிமுத்து. திரைத்துறையில் பணியாற்றுவதற்காக சென்னை வந்த நடிகர் மாரிமுத்து, கவிப்பேரரசு வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றினார்.

marimuthu3 1647528063 1660642192

பின்னர் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். ராஜ்கிரண், மணிரத்னம், வஸந்த், சீமான், எஸ்ஜே சூரியா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். 2011-ல் யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

1946287 1

வாலி, உதயா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்தார். தற்போது வெளியான ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்திருந்தார்.

1119984

எதிர்நீச்சல் டிவி சீரியல் மூலம் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் அறியப்பட்டார் நடிகர் மாரிமுத்து. சீரிய பகுத்தறிவாதியாக திகழ்ந்து டிவி விவாதங்களிலும் அதனை முழுமையாக வலியுறுத்தி பேசிவந்தார்.

kamadenu 2023 09 d76416d9 9c48 4984 99a8

மனமுடைந்து அழுத Marimuthu மனைவி

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக அவருடைய மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மாரிமுத்துவிற்கு மரியாதை கொடுக்கும் விதமாக பிரபல யூட்யூப் சேனல் ஒன்று மாரிமுத்துவின் நினைவை போற்றும் வகையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

G. Marimuthu with his wife and children

அதில் மாரிமுத்துவின் மனைவி மற்றும் அவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவருடைய மனைவி என்னுடைய கணவருக்கு பாசம் காட்ட தெரியாது.

Marimuthu1 1694179413683

தவிர எங்கள் குடும்பம் தான் அவருக்கு உயிர். எங்களுடன் அவ்வப்போது கோபப்படுவார் தவிர எப்போதும் எங்களுடைய நினைப்பில் தான் இருப்பார். எங்களுடைய நலன் தான் அவருடைய நலன் என்று இருப்பார்.

sun tv ethir neechal actor marimuthu

ஆனால் எங்களிடம் அதனை காட்டிக் கொள்ளவே மாட்டார். அவர் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அவரைப் பற்றி எங்கள் அனைவருக்குமே தெரியும். நான் இல்லை என்றாலும் குடும்பத்தை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்று எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்று தன்னுடைய வேதனையை பகிர்ந்து மனமடைந்து அழுது இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top