நடிகர் முரளி
90 களில் இதயத்திற்கு இதமான காதல் படங்களில் நடித்து ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் முரளி. நடிப்பதற்கு திறமை இருந்தால் மட்டும் போதும், கலர் முக்கியம் இல்லை என, நிரூபித்த ஹீரோக்களில் இவரும் ஒருவர்.
தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் முரளி. இவர் 1984இல் பூவிலங்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் பகல் நிலவு, கீதாஞ்சலி, புதிர் மற்றும் இதயம் உள்ளிட்ட படங்களில் முரளி நடித்திருந்தார். தமிழில் நிறைய வெற்றிப் படங்களில் முரளி நடித்திருக்கிறார். இவரது படத்தில் மிக முக்கியமான படம் இதயம்.
இந்த படத்தில் முரளியின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. எனவே அவரை இதயம் முரளி என்று தான் அழைப்பார்கள். கடந்த 2010 இல் மாரடைப்பு ஏற்பட்டு முரளி உயிரிழந்தார். அவரது மகன்தான் அதர்வா.
இதோ புகைப்படம்
நமது நடுயகர் முரளிக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள் அதில் முதல் மகன் தான் அதர்வா, இரண்டாவது மகன் தான் ஆகாஷ், மேலும் மூன்றாவதாக ஒரு மகள் இருக்கிறார் மகள் பெயர் தான் காவியா.
தற்போது முரளி மகள் காவியா தற்போது திருமணம் செய்து தனது கணவருடன் செட்டில் ஆகியுள்ளார். மேலும் தற்போது வரை நமது னடியார் அதர்வா நமது தமிழ் திரைப்படத்தில் நடித்து தான் வருகிறார்.