நடிகை அனுஷ்கா
இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக இரண்டு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. இரண்டு திரைப்படம் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பை தரவில்லை.
இதனால் மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவர் அருந்ததி திரைப்படம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார். இதனை அடுத்து விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த இவருக்கு அதன்பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார் அனுஷ்கா. இதனிடையே இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் நடித்த பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 படம் இந்திய அளவில் பெரும் சாதனை படைத்து இவருக்கும் வெற்றியை தேடித்தந்தது.
வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இந்நிலையில், இவர் பிரபல நடிகர் ஒருவருடன் திருமணமே செய்து கொள்ளாமல் லிவின் ரிலேஷன்ஷிப்பில் ஒரே வீட்டில் வசித்து வந்தார் என்று பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை அனுஷ்கா பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுக்கொடுத்தது.
இந்த படத்தின் கதாநாயகன் பிரபாஸுடன் காதல் வயப்பட்ட நடிகை அனுஷ்கா அவரை சில காலம் காதலித்து வந்ததாகவும் ஆனால் இருபது வீட்டிலும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திருமணமே செய்து கொள்ளாமல் ஒன்றாக ஒரே வீட்டில் சில காலம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்ததும் இருவரும் பிரிந்து விட்டார்கள் எனவும் ஆனால், தற்போது வரை இருவரும் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.