நடிகர் விஜய் ஆண்டனி
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அவர்களின் மகள் லாரா என்று அதிகாலை 3 மணி அளவில் தன்னுடைய அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். இது சினிமா வட்டாரத்தில் மற்றும் இணைய வட்டாரத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாரா திடீரென இந்த முடிவை எடுத்திருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு விஜய் ஆண்டனியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த விஜய் ஆண்டனி.
சமீபத்தில் பல்வேறு சர்ச்சைக்கினார். குறிப்பாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் நடத்திய மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி நடந்த குளறுபடிகளுக்கு காரண கர்த்தாவாக இருந்தது விஜய் ஆண்டனி தான் என்று சமீபத்தில் மார்ஸ் தமிழ்நாடு என்ற யூ-ட்யூப் சேனல் ஒன்றில் தகவல்கள் வெளியாகின.
ரசிகர்கள் சோகம்
ஆனால் அது குறித்து ஆதாரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் கடுப்பான விஜய் ஆண்டனி இது தவறான தகவல் கண்டிப்பாக அந்த தகவலை பரப்பி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் மான நஷ்ட வழக்கு தொடர் இருக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மேலும் உடன் பயின்ற தோழிகளிடம் இவருடைய மனநிலை மற்றும் அவருடைய இந்த முடிவுக்கு என்ன காரணம் இருக்கும் என்று விசாரணை நடத்தப்படலாம் என்று தெரிய வந்திருக்கிறது.
நேற்று இரவு முதல் பெற்றோரிடம் பேசாமல் சோகமாக இருந்திருக்கிறார் லாரா என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனை தொடர்ந்து இணைய பக்கங்களில் பலரும் இவருக்கு ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.